முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாரையும் நம்பாதீர்கள் – என் அனுபவங்கள் சொல்லும் உண்மை

வாழ்க்கையில் ஏமாற்றம் என்பது படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் சமமாய் வரும். ஒரு நபர் உயர்ந்த கல்வி முடித்தாலும், நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும், நேர்மைமிக்க வாழ்கையை நாடினாலும் – சில நேரங்களில் கல்வியில்லாதவர்கள் கூட அவர்களை ஏமாற்றும் நிலை உருவாகும்.

என் பெயர் கௌதமன்.
நான் கணினித் துறையில் முதுகலை பட்டம் பெற்றவன். நான்கு ஆண்டுகள் ஒரு கல்லூரியில் கணினி ஆசிரியராக பணியாற்றினேன். ஆனால் எனக்குள் ஒளிந்திருந்த சினிமா ஆர்வம் அதிகமாகிப் போனதால், அந்த வேலைவிட்டு சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்தேன். ஆனால் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. பல இடங்களில் அவமானம், பணப்பரிவு ஆகியவை நிமித்தமாக ஆனது.

அதன் பிறகு என் திறமையை வெளிக்கொணர யூடியூப் என்ற வாயிலை தேர்ந்தெடுத்தேன். நண்பர்களுடன் இணைந்து நகைச்சுவை கலந்த ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கினேன். தொடக்கத்தில் நல்ல வளர்ச்சி கண்டோம். ஆனால் காலப்போக்கில் நண்பர்கள் பலர் சூழ்நிலை காரணமாக என்னை விட்டு சென்றனர். வீட்டு நபர்களும் இதை ஏற்கவில்லை. “உழைத்து முன்னேற பார், இந்த வகை வேலை நமக்குப் பொருந்தாது,” என்று திட்டியதோடு விட்டனர்.

இந்நிலையில் நடந்தது ஒரு கசப்பான அனுபவம்.
எங்கள் ஊரில் ஒரு கணவன் மனைவி யூடியூப் சேனல் நடத்தி வந்தனர் – 40,000 சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட சேனல். ஆனால் அவர்களுக்கு YouTube-ல் இருந்து வருமானம் கிடைக்கவில்லை. அவர்களின் வீடியோக்கள் தரமற்றவை. பணம் சம்பாதிக்க வழியும் தெரியவில்லை. எனக்கு தெரிந்த விஷயங்களை அவர்கள் சேனலில் உதவியாக பயன்படுத்திக் கொண்டு நானும் வளரலாம் என்று எண்ணினேன். அவர்களிடம் நேரடியாக பேசி, நானும் அவர்களுடன் சேர்ந்து பணிபுரியத் தயாராக இருப்பதாக கூறினேன். சரியாக நான்கு மாதங்கள் அவர்களது வீட்டிற்கு சென்று youtube தொழில்நுட்பங்களை கற்றுத்தந்தேன்.

அனைத்து விஷயங்களும் நன்றாக நடந்துவந்த நிலையில், அவர்கள் மெதுவாக என்னை விலக்க தொடங்கினர். தொலைபேசியில் பேச மறுத்தனர். நேரில் போனாலும் உரையாடாமல் இருந்தனர். ஏமாற்றம் எனக்குப் புலப்படும் அளவுக்கு அவர்கள் நடந்தனர். பின்னர் தெரிந்தது – அவர்கள் யூடியூப் சேனல் மானிடைசேஷனை வேறு யூடியூபர்களின் உதவியுடன் ரகசியமாக செய்து, எனது பங்களிப்பை முழுமையாக மறுத்துவிட்டனர்.

அவர்கள் எனது கடைசி நம்பிக்கை. அவர்களிடம் என் துயரங்களைக் கூறி நெருக்கமாக பழகியவர்கள். ஆனால் இன்று என் முகத்தைக் கூட பார்க்காமல் பயணிக்கும் நிலையில் உள்ளனர்.

மன அழுத்தம், மன வேதனை...
வீட்டில் திட்டுதல்கள்...
இவை அனைத்தையும் கடந்து, இன்று நான் தனியாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து வளர்த்துள்ளேன். தற்போது 3,500 சப்ஸ்க்ரைபர்கள் மட்டுமே இருக்கலாம். ஆனால் இது எனது சொந்த முயற்சியால் வந்த ஒன்று. இனி வளர வேண்டும். பெருமிதமாக வாழ வேண்டும் என்பது என் இலக்கு.

எனவே நான் சொல்ல விரும்புவது:

யாரையும் நம்பாதீர்கள்.

உங்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால், அதை நீங்கள் உங்களாகவே செய்யுங்கள்.

நம்மை நம்பும் குடும்பத்தையே நம்மை ஏமாற்றாமல் இருக்கும் ஒரே இடமாக நம்பலாம்.

மற்றவர்கள் – நண்பர்கள், அயலவர்கள் – ஏமாற்றத்திற்கே இடமளிக்கிறார்கள்.


நம்பிக்கை ஒரு சாதனம், ஆனால் அதை தவறான இடத்தில் வைத்தால் நம்மை எரித்துவிடும்.
நான் அனுபவித்ததைக் கூறுகிறேன். உங்கள் வாழ்க்கையில் ஏமாற்றம் இல்லாமல் உங்களால் முடியும் என்பதை நம்புங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என்னை பற்றி சில துளிகள்!

நான் யார்?  வணக்கம்!   நான் கௌதமன், சேலம், தமிழ்நாடு, இந்தியா.  நான் ஒரு M.C.A பட்டதாரி,  YouTube டெவலப்பர், தொழில் முனைவோர், மற்றும் கதை எழுத்தாளர்.  இந்த பதிவில், எனது திறன்கள், நான் வழங்கும் சேவைகள், மற்றும் நீங்கள் எப்படிப் பயனடையலாம் என்பதைக் கூறுகிறேன். எதற்காக இந்த Blog?   நான் சமூகத்தில் என் திறமைகளை நிரூபிக்க இந்த Blog-ஐ உருவாக்கியுள்ளேன்.  நான் உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் ஐடியாக்கள், ஆரோக்கியக் குறிப்புகள், நல்ல பழக்கங்கள், மற்றும் நேர்மறை சிந்தனைகளை பகிர ஆசைப்படுகிறேன்.  என் YouTube சேனல்கள் நான் 5 YouTube சேனல்களை திறந்து, தனித்தனி தலைப்புகளில் தினமும் கையாள்கிறேன்.   🔹 Gowtham Sir – வாழ்க்கை முறை, தொழில்முனைவோர், மற்றும் பிஜினஸ் ஐடியாஸ் (100+ Subscribers | தொடக்கம் – 2025 Feb)   🔹 Pani Puri – குறும்படங்கள் & காமெடி (8900+ Subscribers | தொடக்கம் – 2023)   🔹 Balloon Blast – பலூன் சேலஞ்சுகள் (100+ Subscribers | தொடக்கம் – 2025 Feb)   🔹 Uzhaippaliyin Kural – தமிழக விவச...

Introducing My Self

Gowthaman K Vanakkam, Tamil Nadu!  Welcome to My Journey of Creativity and Positivity Hello, I’m Gowthaman , hailing from the vibrant city of Salem, Tamil Nadu .  As an M.C.A. graduate with a passion for creativity, I’ve embarked on this blogging journey to inspire, share, and connect with you all.  My mission?  To prove my worth in society by empowering you with practical lifestyle ideas, health tips, good habits, and positive mindset coaching . But that’s not all—I’m also an experienced YouTube developer , managing 5 unique channels to bring diverse content to life: 🎥 Gowtham Sir : A blend of lifestyle ideas and entrepreneurship. (100+ subscribers – Starting Feb 2025) 😂 Pani Puri : Your daily dose of laughter with short films and comedy. (8,900+ subscribers since 2023) 🎈 Balloon Blast : Fun and creative balloon challenges. (100+ subscribers – Starting Feb 2025) 🌾 Uzhaippaliyin Kural : Celebrating Tamil Nadu agriculture through informative videos. (700+ subsc...

காலை டீ காபி குடிக்கிறீர்களா? அப்போ இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

காலை பொழுது விடிந்ததும் அனைவரது வீட்டிலும் முதலில் செய்து தரப்படும் ஒரு பானம் டீ காபி.  அதிகாலை எழுந்தவுடன் டீ காபி குடிப்பது இன்று பலருக்கும் பழக்கமாகிவிட்டது. ஆனால் ஒரே ஒரு கேள்வி தான்: ஏன் அந்த டீ காபி அவ்வளவு அவசியமா? அது உண்மையிலேயே நமக்கு சக்தி தருமா? ஆரோக்கியம் தருமா? 🥛 வெறும் வயிற்றில் பால், டீ தூள், சர்க்கரை... நல்லதா? இப்போது பெரும்பாலான வீடுகளில் பாக்கெட் பால் தான் வாங்குகிறார்கள். அதேபோல், சர்க்கரையும் , டீ தூளும் கடையில் வாங்குகிறார்கள். இவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து, சுண்டக் காய்ச்சி காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கள்கிறார்கள். இப்படி இந்த கலவை (பால், சர்க்கரை, டீ தூள்) சுடச்சுட வயிற்றுக்குள் செல்லும் போது, அது உண்மையில் நமக்கு சக்தியோ நன்மையோ தருவதில்லை. மாறாக, உடலுக்கு வியாதி, மன அழுத்தம், அடிமைத்தனம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. 💸 உங்கள் டீ காபிக்காண செலவுகளை கணக்கில் வையுங்கள்! ஒரு நாளைக்கு பால், டீ தூள், சர்க்கரை வாங்கும் செலவு எவ்வளவு? அதை காய்ச்ச பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கு ஆகும் செலவு எவ்வளவு? மாதம் முழுக்க இந்த டீ காபி செய்வ...